சிவாஜி திரைப்படத்தில் முஸ்லிம்களை ஹவாலா(உண்டியல்) மாற்றுபவர்களாக காட்டியதைக் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதை முஸ்லிம்கள் கண்டிக்கவில்லை என பொதுவான கருத்து இணையத்தில் உலா வருகிறது. இப்படம் வெளிவந்த இரு நாட்களிலேயே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ( த.மு.மு.க) கண்டன் அறிக்கை வெளியிட்டது மட்டுமல்லாமல், ஷங்கர் இக்காட்சியை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்தது. (நடக்காத காரியம்) மேலும் பல இஸ்லாமிய பத்திரிகைகள் இதற்கு கண்டனம் தெரிவித்தது.
அமீரகத்தில் இருப்பவர்களுக்கு தெரியும் ஹ்வாலா தொழிலில் கொடிகட்டிப் பறப்பவர்கள் மார்வாடிகள்,குஜராத்திகள்,சிந்திகள், இவர்கள் துபாய் அரசிற்கு போட்டி அரசாங்கமே நடத்தி வருகிறார்கள். இவர்களிடம் கை நீட்டி பணம் வாங்கும் துபாய் ஷேக்குகள் ஏராளம்.இந்தியாவில் cofeposa, fera, மோசடியில் மாட்டும் குஜாராத்திகள், சிந்திகள் தஞ்சம் புகுவது துபாயில் மட்டுமே. இப்படி இருக்க முஸ்லிம்கள்தான் இதில் அதிக ஈடுபாடு உடையவர்கள் என் ஷங்கர் சொல்வது அபத்தத்திலும் அபத்தம். அதற்காக முஸ்லிம்கள் மனிதப்புனிதர்கள் என சொல்ல வரவில்லை. மார்வாடி முதலைகளுக்கு சேவை செய்பவர்கள் தமிழக முஸ்லிம் உண்டியல் வியாபாரிகள் அம்புட்தேன். ஷங்கருக்கு இது தெரிய நியாயமில்லை, ஒருவேளை ஷங்கருக்கு பாக்கிஸ்தான் தொடர்பு இருக்குமோ அங்கேதான் முஸ்லிம்கள் அதிக அளவில் ஹ்வாலா செய்கிறார்கள். அடுத்து, குஜாராத் கலவரத்திற்கும், அயோத்தி கர சேவைக்கும் கோடி கோடியாக அமெரிக்கா குஜராத்தியர்களிடமிருந்து வந்தது ஹ்வாலா இதை செய்தவர்கள் குஜராதிகள்.
அடுத்து முஸ்லிம்கள் இது குறித்து கண்டனம் தெரிவிக்க அவசியமேயில்லை. மாறாக ஷங்கருக்கு நன்றி சொல்ல வேண்டும். மணிரத்னம்,அர்ஜூன் போன்றவர்கள் முஸ்லிம்களை பயங்கரவாதியாக, தீவிர வாதியாக சித்தரிக்கும் போது குறைந்த பட்சம் ஹவாலா செய்பவர்களாக காட்டியுள்ளாரே அதற்காக
Saturday, June 30, 2007
Monday, June 11, 2007
எப்போ எழுத ஆரம்பித்தேன் ! நினைவிலில்லை. பாலாபிள்ளை tamil.net ஆரம்பித்து ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்த காலத்திலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். பின்பு மைலை எழுத்துரு , தஸ்கி, unicode என மாறிக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில், குமார் மல்லிகார்ஜுன்,மெய்யப்பன்,மணிவண்ணன்,ரமனீதரன் கந்தையா,தமிழரசன்,தம்பி சுலைமான் என எழுதிக் கொண்டிருந்தார்கள். தற்போது இவர்கள் எழுதுவதில்லையா ஏன் என தெரியவில்லை.
எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என ஆவல் வெகுநாளாய், ஏதோ எனக்குத் தெரிந்த வரை பூ தொடுக்க ஆரம்பித்துள்ளேன்.
எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என ஆவல் வெகுநாளாய், ஏதோ எனக்குத் தெரிந்த வரை பூ தொடுக்க ஆரம்பித்துள்ளேன்.
Subscribe to:
Posts (Atom)